4 scaled
உலகம்செய்திகள்

புதிய கொரோனா மாறுபாடு! உருவாகியுள்ள அச்சம்

Share

புதிய கொரோனா மாறுபாடு! உருவாகியுள்ள அச்சம்

புதிய கொரோனா மாறுபாடு பல நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுவரும் விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா மாறுபாடு
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான பிரோலா வைரஸ் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும் அது குறித்த கவலை உருவாகியுள்ளது.

இந்த பிரோலா வைரஸ் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டது. மேலும், முன்பு எடுத்துக்கொண்ட கோவிட் தடுப்பூசிகளையும் மீறி இந்த பிரோலா வைரஸ் தொற்றை ஏற்படுத்தலாம் என கருதப்படுவதே அச்சத்துக்கு காரணம் ஆகும்.

கழிவு நீரை ஆய்வுக்குட்படுத்தியதில், சுவிட்சர்லாந்திலும் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொற்று குறித்து பலரும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையில், சூரிச் மாகாணம் இலவச கொரோனா பரிசோதனைகளை மீண்டும் துவக்கியுள்ளது.

ஒரே நல்ல விடயம் என்னவென்றால், பிரித்தானிய அறிவியலாளராகிய Francois Balloux, பிரோலா அதிக அளவில் பரவினாலும், கோவிட் பரவத்துவங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டதுபோல, மோசமான நோய்வாய்ப்படுதலோ மரணங்களோ ஏற்படாது என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளதுதான்!

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...