4 scaled
உலகம்செய்திகள்

புதிய கொரோனா மாறுபாடு! உருவாகியுள்ள அச்சம்

Share

புதிய கொரோனா மாறுபாடு! உருவாகியுள்ள அச்சம்

புதிய கொரோனா மாறுபாடு பல நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுவரும் விடயம் கவலையை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா மாறுபாடு
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான பிரோலா வைரஸ் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும் அது குறித்த கவலை உருவாகியுள்ளது.

இந்த பிரோலா வைரஸ் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டது. மேலும், முன்பு எடுத்துக்கொண்ட கோவிட் தடுப்பூசிகளையும் மீறி இந்த பிரோலா வைரஸ் தொற்றை ஏற்படுத்தலாம் என கருதப்படுவதே அச்சத்துக்கு காரணம் ஆகும்.

கழிவு நீரை ஆய்வுக்குட்படுத்தியதில், சுவிட்சர்லாந்திலும் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொற்று குறித்து பலரும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையில், சூரிச் மாகாணம் இலவச கொரோனா பரிசோதனைகளை மீண்டும் துவக்கியுள்ளது.

ஒரே நல்ல விடயம் என்னவென்றால், பிரித்தானிய அறிவியலாளராகிய Francois Balloux, பிரோலா அதிக அளவில் பரவினாலும், கோவிட் பரவத்துவங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டதுபோல, மோசமான நோய்வாய்ப்படுதலோ மரணங்களோ ஏற்படாது என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளதுதான்!

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...