3 18 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?

Share

ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?

ஜேர்மன் சேன்ஸலர் சிறிய விபத்தொன்றை சந்தித்ததாக ஜேர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் ஜாகிங் சென்ற ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கீழே விழுந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பங்கேற்க இருந்த பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

வாரம் முழுவதும் சேன்ஸலர் ஷோல்ஸுக்கு பல அரசுப் பணிகள் உள்ள நிலையில், இந்த விபத்தால் அவை தடைபடுமா என கேள்வி எழ, சேன்ஸலர் கீழே விழுந்ததால் அவரது முகத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் அவர் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை அவர் நாடாளுமன்றத்தின் கீழவையில் பட்ஜெட் தொடர்பில் உரையாற்ற உள்ளார்.

முக்கியமாக, வெள்ளிக்கிழமை, சேன்ஸலர் ஷோல்ஸ் இந்தியா செல்கிறார். இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷோல்ஸ் இந்தியா செல்கிறார்.

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...