3 17 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

Share

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டார்.

அந்தப் பெண்ணையும் இளைஞரையும் தாக்கிய நபர் இன்னமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ள பொலிசார், அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரால் இப்போதைக்கு பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...