3 17 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

Share

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டார்.

அந்தப் பெண்ணையும் இளைஞரையும் தாக்கிய நபர் இன்னமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ள பொலிசார், அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரால் இப்போதைக்கு பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...