rtjy 13 scaled
உலகம்செய்திகள்

தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்த சவூதி

Share

தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்த சவூதி

மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அறிமுகம் செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ”மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனையை”பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெற்றிகரமாக தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.

குறித்த இயந்திரம் மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் (Barcode), பயனாளிகள் பயன்படுத்துவதற்கான தொடர்புத் திரை, ரோபோக்களை பயன்படுத்திய ஒரு சிறப்பு இயக்க முறைமை மற்றும் மருந்துச் சீட்டின் தயார்நிலையைப் பயனாளிக்குத் தெரிவிப்பதற்கான செய்தி தளம் போன்றவற்றை கையாளும் பணி அமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

24 மணிநேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102–700 மருந்து வகைகளை சேமிக்கும் திறனை கொண்டமைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகளை தினசரி, மாதாந்தம் அல்லது வருடாந்த அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களையும் இவ்வியந்திரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...