23 64ee8985180f6
உலகம்செய்திகள்

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

Share

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

தற்போதைய சூழலில் சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது என பிரேசிலின் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரஷ்யா தகவல் அளித்துள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட எம்ப்ரேயர் விமானம் கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளானதில் இறந்தனர்.

ரஷ்ய ராணுவ நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 மாதங்களுக்கு பிறகு எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியாகியுள்ளார். 1999ல் ரஷ்யாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த விளாடிமிர் புடினுக்கு இந்த ஆயுத கிளர்ச்சியானது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு உதவ ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டால், உதவ தயார் என பிரேசிலின் CENIPA அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காத ரஷ்யா, தற்போது விசாரணை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.

ஆனால் பிரிகோஜின் இறப்பில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ரஷ்யா வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சில முன்னாள் புலனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய எம்ப்ரேயர் விமானமானது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்புடைய விமான விபத்தில் எந்த வகையிலும் ரஷ்யா ஈடுபடவில்லை என்றே புடின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய விமானமானது மாஸ்கோவில் இருந்து உள்ளூர் நகரமொன்றில் புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளதால், அது சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட தேவையிருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...