23 64ee8985180f6
உலகம்செய்திகள்

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

Share

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

தற்போதைய சூழலில் சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது என பிரேசிலின் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரஷ்யா தகவல் அளித்துள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட எம்ப்ரேயர் விமானம் கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளானதில் இறந்தனர்.

ரஷ்ய ராணுவ நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 மாதங்களுக்கு பிறகு எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியாகியுள்ளார். 1999ல் ரஷ்யாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த விளாடிமிர் புடினுக்கு இந்த ஆயுத கிளர்ச்சியானது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு உதவ ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டால், உதவ தயார் என பிரேசிலின் CENIPA அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காத ரஷ்யா, தற்போது விசாரணை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.

ஆனால் பிரிகோஜின் இறப்பில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ரஷ்யா வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சில முன்னாள் புலனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய எம்ப்ரேயர் விமானமானது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்புடைய விமான விபத்தில் எந்த வகையிலும் ரஷ்யா ஈடுபடவில்லை என்றே புடின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய விமானமானது மாஸ்கோவில் இருந்து உள்ளூர் நகரமொன்றில் புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளதால், அது சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட தேவையிருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...