2 7 1 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

Share

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையங்கள் விரைவில் நிரம்பி வழியலாம் என்பதால், புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை அணிவிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.

பிரித்தானியா, சட்டவிரோத புமபெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.

மிதவைப்படகுகளில் புலம்பெயர்ந்தோரை அடைக்கலாம் என்றால், அங்கு சுகாதாரப் பிரச்சினை. ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டால், அந்த திட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனாலும், விடாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்துகொண்டே வருகிறது உள்துறை அலுவலகம்.

தடுப்புக்காவல் மையங்கள் நிரம்பும் பட்சத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் முயன்றுபார்த்துவிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.

பிரித்தானியாவிலிருந்து ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டியுள்ள நிலையில், அவர்களைக் கட்டாயம் கண்காணித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் சுவெல்லா.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், தடுப்புக்காவல் மையங்களில் 2,500 பேருக்குத்தான் இடம் உள்ளது.

ஆகவே, தடுப்புக்காவல் மையங்களில் இடமில்லாததால் வெளியே நடமாட விடப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தலைமறைவாகிவிடாமல் தடுப்பதற்காக, அவர்களுக்கு, காலில் மின்னணுப்பட்டை அணிவிப்பது முதல் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் பரிசீலித்துவருவதாக தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....