3 14 scaled
உலகம்செய்திகள்

ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கைது

Share

ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கைது

தமிழக மாவட்டம், மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, ரயிலில் சட்டவிரோதமாக சமையல் சிலிண்டர் மூலம் தேநீர் சமைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென லக்னோ பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை தமிழகம் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...