GettyImages 618910604 scaled
உலகம்செய்திகள்

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

Share

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

ஒன்ராறியோவில் 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி முன்னாள் ஒலிம்பிக் நட்சத்திரம் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் ஸ்கேட் கனடா நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சாலை விபத்தானது ஒன்ராறியோவின் ஷெல்பர்னின் வடக்கே நடந்துள்ளது.

சம்பவத்தின் போது 31 வயதான அலெக்ஸாண்ட்ரா பால் தமது பிள்ளையுடன் பயணப்பட்டுள்ளார். அப்போது லொறி ஒன்று தவறான பாதையில் புகுந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வரிசையாக மோதியுள்ளது.

இதில் அலெக்ஸாண்ட்ரா பால் சம்பவயிடத்திலேயே காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு சிறார்களுக்கான மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா பால் மற்றும் அவரது இணையும் கணவருமான மிட்செல் இஸ்லாம் உடன் 2014 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

பல சர்வதேச பதக்கங்களை இந்த இணை வென்றது. மட்டுமின்றி, மூன்று கனடிய சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றுள்ளது. 2016ல் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து அலெக்ஸாண்ட்ரா பால் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...