China school
உலகம்செய்திகள்

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

Share

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

20 நாட்களுக்கு மேல் பாடசாலை வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனி சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பாடசாலைக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும்.

அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். இதை அலட்சியமாக எடுக்கும் பெற்றோர்களுக்கு தான் இந்தநிலை ஏற்படும்.

பாடசாலை வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனி சிறை தண்டனை! | School Students Absent Soudi Arabia Parents Order

இது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2 வது எச்சரிக்கை விடுக்கப்படும்.

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும்.

15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.

மேலும் 20 நாட்களுக்கு தொடர்ந்து வரவில்லை என்றால் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...