3 12 scaled
உலகம்செய்திகள்

மோசடிக்குள்ளாக்கப்படும் சர்வதேச மாணவர்கள்: திருப்பி அடித்த இந்திய மாணவி

Share

மோசடிக்குள்ளாக்கப்படும் சர்வதேச மாணவர்கள்: திருப்பி அடித்த இந்திய மாணவி

கனடா கனவுகளில் வாழும் சர்வதேச மாணவ மாணவியர்கள் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இந்திய மாணவர்கள் சுமார் 700 பேர் ஏஜண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்ட விடயம் கனடா மற்றும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார்.

அவர் விண்ணப்பித்தது Vancouver Community College (VCC) என்னும் கல்லூரிக்கு. ஆனால், Anil Kumar Sharma என்னும் இந்திய ஏஜண்ட், ஷிவானியை வான்கூவரிலுள்ள Granville College என்னும் கல்லூரியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி ஷிவானி 13,500 டொலர்கள் கல்விக்கட்டணம் செலுத்தி Granville கல்லுரியில் சேர, பிறகுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, தான் சேர விரும்பிய பாடப்பிரிவுக்கு பதிலாக, தான் வேறொரு பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே, கல்லுரியிலிருந்து விலக முடிவு செய்த ஷிவானி, தான் கட்டிய கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால், கல்விக்கட்டனத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் One Voice Canada என்னும் அமைப்பை அணுகியுள்ளார் ஷிவானி.

அந்த அமைப்பின் இணை நிறுவனரான Balraj Kahlon, இப்படி கனடாவிலுள்ள தனியார் கல்லூரிகளும், இந்திய ஏஜண்டுகள் சிலரும் இணைந்து, இதுபோல் மாணவ மாணவிகளை தவறாக வழிநடத்தி வருவதாகவும், ஷிவானியின் வழக்கு அதற்கு ஒரு உதாரணம் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

இந்திய ஏஜண்ட் உதவியுடன், ஷிவானியின் ஆவணங்களிலும் மோசடி செய்யப்பட்டு அவரது கையெழுத்து, ஏற்கனவே இறந்துபோன அவரது தந்தையின் கையெழுத்து ஆகியவை மாற்றப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பிரிட்டிஷ் கொலம்பியாவின் Private Training Institutions Branch (PTIB) என்னும் ஒழுங்கு முறை அமைப்பு, Granville கல்லூரி ஷிவானியை தவறாக வழிநடத்தியுள்ளது என்று கூறி, ஷிவானிக்கு 10,000 டொலர்களை திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...