6 12 scaled
உலகம்செய்திகள்

மொட்டை அடித்துக் கொண்ட காயத்ரி ரகுராம்!

Share

பிரபல நடிகையும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்துக் கொண்டு தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக புகழ்பெற்றவர் காயத்ரி ரகுராம், சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட காயத்ரி ரகுராம், எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்களை குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய மாணவரின் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கிடையே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற காயத்ரி ரகுராம், மொட்டையடித்துக் கொண்டுள்ளார்.

மேலும் தன்னுடைய 10 ஆண்டு கால வேண்டுதலை, அர்ப்பணிப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் அவர் வெளியிட, ஆன்மீகவாதியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...