1 6 1 scaled
உலகம்செய்திகள்

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

Share

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

பிரேசில் நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவரின் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸா பாலோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆகஸ்டு 18ம் திகதி 28 வயதேயான தல்லிதா பெர்னாண்டஸ் என்ற இளம் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது.

தல்லிதா திடீரென்று மாயமான நிலையில், அவரது நண்பர்களே பொலிசாருக்கு தகவல் அளித்து, விசாரிக்க கோரியுள்ளனர். இந்த நிலையில், அவரது குடியிருப்புக்கு சென்ற பொலிசார், சூட்கேசுக்குள் அவரது நிர்வாண உடல் அடைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவரது காதலன் மார்டின் சில்வா மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்குமேல் 4.15 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பொலிசார், குளியலறையில் ரத்தக்கறை படிந்திருப்பதை கவனித்துள்ளனர். படுக்கையறையிலும் ரத்தக்கறை காணப்பட்டுள்ளது. மேலும், அந்த அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மருத்துவர் தல்லிதாவின் நிர்வாண சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தல்லிதாவின் காதலனை விசாரணைக்காக தொடர்புகொள்ள முயன்ற பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேலும், மருத்துவர் தல்லிதாவை தொடர்புகொண்ட ஒருவருக்கு, வேலைப்பழு அதிகமாக உள்ளது, இப்போது பதிலளிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவரது குறுந்தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய நாள் அவர் பணிக்கு செல்லவில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்திற்கு முன் காலையில் சண்டை சத்தம் குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் செய்ததாக கட்டிடத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குடியிருப்பில் இருந்து மருத்துவரின் காதலன் தனியாக புறப்பட்டு சென்றதையும் நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...