கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
உலகம்செய்திகள்

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

Share

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா முழுதும்அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது வேகமாக பரவி வருவதால் 2,400 வீடுகளில் வசிக்கும் சுமார் 36,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீப்பரவல் காரணமாக வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படும் எனவும், சுமார் 15,000 – 20000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...