900 விமானங்கள் வரையில் ரத்து... பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு
உலகம்செய்திகள்

900 விமானங்கள் வரையில் ரத்து… பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

Share

900 விமானங்கள் வரையில் ரத்து… பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

ஜப்பானில் புயல் காரணமாக சுமார் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 240,000 மக்களுக்கு பாதுகாப்பு கருதி வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான லான் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

குறித்த புயல் வடக்கு நோக்கி நகரும் நிலையில் மத்திய மற்றும் மேற்கு ஜப்பானில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியது. நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என அதிகாரிகள் தரப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் லான் புயல் மந்தமாக நகர்ந்தது எனவும், அதே பகுதிகளில் பல மணி நேரம் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்திருந்தனர்.

லான் புயல் காரணமாக 2 டசின் மக்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புயல் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், சாலைகள் சில மூடப்பட்டதுடன், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 90,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது என உரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...