உலகம்

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்

Share
புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்
புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்
Share

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல்: பிரித்தானியா கோபம்

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்சுக்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது.

500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக பிரான்ஸ் செய்துள்ள செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மீன் பிடிக்கும் வலைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் மிதப்பதற்காக, அவற்றின் ஓரங்களில் பந்து போன்ற ரப்பர் மிதவைகளை இணைத்திருப்பார்கள்.

பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் பாயும் Canche என்னும் நதியில், அப்படி சில மிதவைகளை சேர்த்துக் கட்டி, அந்தக் கயிற்றின் இரண்டு ஓரங்களிலும் காங்கிரீட்டாலான கற்களை இணைத்து வைத்துள்ளது பிரான்ஸ் தரப்பு.

அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் நோக்கி பயணிக்கும் கடத்தல்காரர்களின் படகுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையாம்.

500 மில்லியன் பவுண்டுகளையும் வாங்கிக்கொண்டு, பிரான்ஸ் செய்துள்ள இந்த செயல் பிரித்தானியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் Canche நதியில் அமைத்துள்ள தடுப்பு, ஒரு வாத்தைக் கூட தடுக்காது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Clarke-Smith, இது மொத்த அமைப்பையும் கேலி செய்வது போல் அமைந்துள்ளதுடன், ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Nigel Mills, பிரான்ஸ் தரப்பு சீரியஸாக எதையும் செய்வதுபோல் தெரியவில்லை, கடத்தல்காரர்கள் பிரான்சின் இந்த செய்கையைக் கண்டால், விழுந்துவிழுந்து சிரிக்கப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்றுதான், பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்ததில், ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

24 2
உலகம்செய்திகள்

இந்தியாவில் போர் ஒத்திகை : மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், வரும் 7ஆம் திகதி இந்தியா முழுக்க போர்க்கால ஒத்திகை...