கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை... பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்
உலகம்செய்திகள்

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

Share

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

ஸ்பெயின் நாட்டில் இருந்து தான்சானியா செல்லும் வழியில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டு, தாயார் மற்றும் அவரது 3 வயது மகளை பிரித்தானிய விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

லண்டன் கேட்விக் விமான நிலையம்
தான்சானியாவை சேர்ந்த 29 வயது தாயார் Benadetha Rwehumbiza ஸ்பெயின் நாட்டில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் ஊடாக கத்தார் சென்று அங்கிருந்து சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

மே 8ம் திகதி லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லண்டனில் இருந்து கத்தார் செல்லும் அவர்களுக்கான இணைப்பு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்னொரு விமானத்தில் கத்தார் புறப்படும் வகையில் புதிய போர்டிங் பாஸ்களை இவர்களுக்கு அளித்துள்ளனர். இருப்பினும் புதிய சிக்கல் ஏற்பட்டது.

அதாவது Benadetha-வின் 3 வயது மகள் பிரித்தானியாவில் பிறந்தவர் என்பதால், அவருக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்துள்ளது. Benadetha-வுக்கு இல்லை. மட்டுமின்றி, பிரித்தானியாவுக்குள் பயணிக்க போதுமாக ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இந்த நிலையில், ஹீத்ரோ விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு நாட்டைவிட்டு வெளியேற 24 மணி நேர அவகாசம் அளித்துள்ளதுடன், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் அதிகாரிகளால் எச்சரித்துள்ளனர்.

100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ
கேட்விக் விமான நிலையத்தில் இருந்து 100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ சென்றதாக கூறும் Benadetha, பிரித்தானியாவில் தங்க வேண்டும் என்று தாம் வரவில்லை. இணைப்பு விமானம் ரத்தானதால் ஹீத்ரோ செல்ல வேண்டியிருந்தது என்றார்.

மேலும், உரிய கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாமல் லண்டன் தெருவில் அவர்களை அதிகாரிகள் தவிக்க விட்டதாக Benadetha-வின் பிரித்தானிய கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோத புலம்பெயர் மக்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் முறை அவருக்கு தெரியும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் நெருக்கடியில் அவர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மொத்த குழப்பத்திற்கும் காரணம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் என குறிப்பிட்டுள்ள Benadetha, கேட்விக் விமான நிலையத்தில் வைத்தே அவர்கள் தங்களை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...