அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை
உலகம்செய்திகள்

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

Share

அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை

ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து இரண்டு மூதாட்டிகள் ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, ஒய்எஸ்ஆர் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தனது குடும்பத்துடன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ரோஜா சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், கோவிலில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ரோஜாவிடம் வயதான பெண்கள் இருவர் பூ, வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை கொடுத்தனர்.

பின்னர், திடீரென அமைச்சரின் காலில் விழுந்து, அவரது காலுக்கு மஞ்சள் குங்குமம் தேய்த்து வணங்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வயதில் மூத்த பெண்கள் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...