அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்!  சரணடைந்த 21 வயது இளம் பெண்
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்!  சரணடைந்த 21 வயது இளம் பெண்

Share

அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்!  சரணடைந்த 21 வயது இளம் பெண்

அமெரிக்காவின் அலபாமாவில் ஆற்றப்படகு குழுவின் இணை கேப்டன் தாக்கப்பட்ட சம்பவத்தில், 21 வயது இளம் பெண்ணொருவர் 4வது நபராக பொலிசாரிடம் சரணடைந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று, அலபாமா மாண்ட்கோமெரியில் ஆற்றுப்படகு நிறுத்துமிடத்தில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது.

கறுப்பின இணை கேப்டன் டேமியன் பிக்கெட் (31) தனது படகை வழக்கமான நிறுத்த சிலரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் வெள்ளை இன நபர்கள் அவரை வசைபாடியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் படகை பிக்கெட் மூன்றடி மேலே நகர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர்கள் பிக்கெட்டை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி இனரீதியான தாக்குதல் என வைரலானது. இதனைத் தொடர்ந்து ரிச்சர்ட் வில்லியம் ராபர்ட்ஸ் (48), ஆலன் டோட் (23), சச்சேரி சேஸ் ஷிப்மேன் (25) ஆகிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நான்காவதாக மேரி டோட் என்ற 21 வயது இளம்பெண், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி தாமாக முன் வந்து பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மாண்ட்கோமெரி பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மாண்ட்கோமெரி நகர மேயர் ஸ்டீவன் ரீட் கூறும்போது, ‘தனது வேலையை செய்து கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதற்காக பல பொறுப்பற்ற நபர்களை கைது செய்ய மாண்ட்கோமெரி காவல்துறை விரிவாக செயல்பட்டது’ என தெரிவித்தார்.

அத்துடன் இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், இது ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...