நடமாடும் சுடுகாட்டில் ராணுவ வீரர்களை தகனம் செய்யும் ரஷ்யா!
உலகம்செய்திகள்

நடமாடும் சுடுகாட்டில் ராணுவ வீரர்களை தகனம் செய்யும் ரஷ்யா!

Share

நடமாடும் சுடுகாட்டில் ராணுவ வீரர்களை தகனம் செய்யும் ரஷ்யா!

ரஷ்யா, தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை, நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடு
உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், இழப்புகளை மறைப்பதற்காக, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை ரஷ்யா, உக்ரைனில் வைத்தே தகனம் செய்துவிடுவதாகவும், உக்ரைன் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் உக்ரைன் நகரமான Melitopolஇல் ஒரு நடமாடும் தகன வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகள் மூலம் அங்கு கொண்டு வரப்படுவதாகவும், அங்கு வைத்தே அந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அந்த தகன வாகனத்தில் தொடர்ந்து உடல்கள் தகனம் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், எப்போதும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறதாம்.

குறிப்பாக இரவு நேரங்களில் பிணவாடை வீசிக்கொண்டே இருப்பதாக உள்ளூர் மக்கள் புகார் கூறுவதாகவும் உக்ரைன் ராணுவ பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...