பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!
உலகம்செய்திகள்

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

Share

பிரித்தானிய மகாராணியாரின் இறுதி புகைப்படம் தேசிய விருதுக்காக தேர்வு!

பிரித்தானியாவில் தேசிய புகைப்பட விருது ஒன்றிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள 20 புகைப்படங்களில், மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் புகைப்படங்களுக்கான தேசிய விருது அல்லது, UK Picture Editors’ Guild awards, அல்லது 2022 photo of the year விருது என்று அழைக்கப்படும் விருதுக்காக, 20 புகைப்படங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், மக்கள் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்துக்கு வாக்களித்து, அதை 2022ஆம் ஆண்டுக்கான புகைப்படமாக தேர்வு செய்யலாம்.

செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை மக்கள் வாக்களிக்கலாம். தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த முடிவுகள், அக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்படும்.

மகாராணியாரின் இறுதி புகைப்படங்களில் ஒன்று
விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் மகாராணியாரின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

லிஸ் ட்ரஸ் பிரதமராக தெர்வு செய்யப்பட்டபோது, அவரை சந்திப்பதற்காக மகாராணியார் வந்திருந்தபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 8ஆம் திகதி, மகாராணியார் இயற்கை எய்திவிட்டார். ஆகவே, இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்த ஒரு புகைப்படமாக கருதப்படுகிறது.

மேலும், தன் தாய் இளவரசி கேட்டின் வாயை கையால் மூடும் குட்டி இளவரசர் லூயிஸின் புகைப்படம், மகாராணியாரின் அருகே நின்றபடி, விமானங்களின் சத்தத்தைக் கேட்டு காதை மூடிக்கொள்ளும் லூயிஸ், மன்னரானதும் தன் பணியைத் துவக்கும் சார்லஸ், கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக்கோப்பையை பிடித்திருக்கும் புகைப்படம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான படங்கள் ஆகியவை நாமினேஷனில் உள்ளன.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...