உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

Share

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

வெளிநாட்டவர்களைக் கவர ஜேர்மனி பல நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால், ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு படி மேலே போய், வெளிநாட்டவர்களுக்காக பல நல்ல திட்டங்களை துவக்க தீவிரமாக முயன்றுவருவதாக வெளியாகியுள்ள செய்தி மனம் மகிழச் செய்வதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்காக திட்டங்கள்
ஜேர்மனி ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்பதால். பிற ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் ஜேர்மனிக்கு வருவதில் பெரிய பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜேர்மனி மட்டுமின்றி பல நாடுகள் தற்போது பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவருகின்றன. ஆகவே, பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக மற்ற நாட்டுப் பணியாளர்களை வரவேற்க அவை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

ஜேர்மனியோ, அதற்காக புதிய சட்டம் உருவாக்கும் எல்லை வரை சென்றுவிட்டது.

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நடவடிக்கைகள்
அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட ஜேர்மன் நகரம், வெளிநாட்டவர்களுக்காக, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களை வரவேற்பதற்காக, பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

அப்படி வெளிநாட்டவர்களுக்காக திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் நகரம் Munich.

ஆம், Munich நகர பசுமைக் கட்சியினர், ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக ‘வரவேற்பு மையம்’ ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள்.

அதாவது, சில நாடுகள், வெளிநாட்டவர்களை வரவேற்கின்றன. ஆனால், அவர்கள் வந்தபின்,

அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்கள் புதிய நாட்டில் அவர்களுக்குக் கடினமாக உள்ளன.

புது வாழ்வைத் துவக்கலாம் என சில நாடுகளுக்கு வந்த மக்கள், அமைதியாக தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்ற விடயங்களும் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, Munich நகருக்கு வரும் மக்கள் அப்படி எந்த பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடாது. அதாவது, அவர்கள் ஜேர்மனிக்கு வருவது மட்டுமல்ல, அங்கேயே மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழவேண்டும் என Munich நகர பசுமைக் கட்சியினர் விரும்புகிறார்கள்.

அபப்டியானால், ஜேர்மனிக்கு வருவோருக்கு, வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்களை எளிதாக்கவேண்டும், அதற்கு உதவவேண்டும் இல்லையா?

ஆகவே, அப்படி வெளிநாட்டவர்களுக்கு சகல உதவிகளையும் செய்யும் ஒரு வரவேற்பு மையத்தைத்தான் Munich நகர பசுமைக் கட்சியினர் உருவாக்க விரும்புகிறார்கள் என வெளியாகியுள்ள தகவல், பெருமகிழ்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...