ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை
உலகம்செய்திகள்

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

Share

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு இல்லை!

அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன், மன்னர் சார்லசின் தாயாகிய எலிசபெத் மகாராணியார் மரணமடைந்து ஒரு ஆண்டு முடிவடைகிறது.

மகாராணியார் மறைந்ததன் ஓராண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பால்மோரல் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும்கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மறைந்த மகாராணியாரின் செல்லப் பேரனான இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இத்தனைக்கும், ஹரி, செப்டம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் துவங்க இருக்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்காக Düsseldorf நகருக்கு வருகிறார்.

ஆகவே, அவர் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் எளிதாக கலந்துகொள்ள முடியும். ஆக, ஹரி மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஐரோப்பாவிலேயே இருந்தும் கூட அவருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...