சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!
உலகம்செய்திகள்

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

Share

சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலி!

செல்போன் சார்ஜர் வயரை கடித்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செல்போனிற்கு ஜார்ஜ் போட்டுவிட்டு அதனை ஆஃப் செய்யாமல் போனதால் நிகழ்ந்த துயர சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வாரை சேர்ந்த தம்பதியினர் கல்குட்கர் மற்றும் சஞ்சனா.

இவர்களுக்கு, சானித்யா என்ற 8 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சஞ்சனா தனது வீட்டில் உள்ள மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் சென்றுள்ளார்.

அப்போது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையான சானித்யா சார்ஜர் வயரை கடித்துள்ளது, எதிர்பாராதவிதமாக வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.

உடனே, குழந்தையின் பெற்றோர் பதறிப்போய் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சார்ஜ் வயரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சார்ஜ் வயர்களிலோ, கேபிள் வயர்களிலோ, இன்டெர்ன்ட் வயர்களிலோ மின்சாரம் பாய்ந்து கொன்டே இருக்கும். அதை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். மேலும், மொட்டை மாடியில் போகும் வயரில் ஈரத்துணியை காய வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...