ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!
உலகம்செய்திகள்

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!

Share

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப்! வெளியான தகவல்!

அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் டீ கப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பள்ளியில் உள்ள மாணவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு, பள்ளிக்கு வந்த பெற்றோர், அருகிலிருந்த உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு, மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு திணறலை தடுக்க ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தும்படி கூறினர்.

பின்பு, மாணவனை அங்கிருந்த வார்டில் அனுமதித்தனர். இந்த ஆக்சிஜன் மாஸ்க் பொருத்துவதால் ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து மற்றொரு துவாரத்தின் வழியே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் அருகிலிருந்த கடைக்கு சென்று டீ கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்கள். பின்பு, டீ கப்பில் துளையிட்டு ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபை இணைத்து மாணவனிடம் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்கள்.

இதனை, அருகில் இருந்த நோயாளி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இந்த மாதிரி நடப்பது முதல்முறையல்ல, கடந்த வாரமும் ஒருவருக்கு இப்படி தான் நடந்துள்ளது” என பேசியுள்ளார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அலட்சியமாய் இருந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தியற்கும் மருத்துவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு சென்றதையடுத்து மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...