உலகம்செய்திகள்

12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
Share

12 வயது சிறுமி வன்கொடுமை.. உடலில் பற்காயங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பிறப்புறுப்பில் கடினமான பொருளை செருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமி பலாத்காரம்
இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான மைஹரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மைஹர் நகரில் உள்ள ஒரு பிரபலமான கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் பணிபுரிந்த இருவர், 12 வயது சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து மிருகத்தனமாக நடந்துள்ளனர். சிறுமியின் உடலில் பற்களால் கடித்த ரத்த காயங்களும், பிறப்புறுப்பில் கடினமான பொருள் செருகியது போன்றும் காணப்பட்டுள்ளது.

அதிக இரத்தப்போக்கு, உடலில் கடித்த அடையாளங்களுடன், மருத்துவ சிகிச்சைக்காக ரேவா பிரிவு தலைமையகத்திலுள்ள மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது. இவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகளின் வீடுகள் இடிப்பு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மைஹார் முனிசிபல் கவுன்சிலின் தலைமை நகராட்சி அதிகாரி இருவரின் குடும்பங்களுக்கும் அவர்களது நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான ஆவணங்களைக் கோரி நோட்டீஸ் அனுப்பியதாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்டிஓபி) லோகேஷ் தபார் தெரிவித்தார்.

மேலும், விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளும் சட்டவிரோதமானது என்று தெரியவந்தது.

படோலியாவின் வீடு விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்றும், ரவீந்திர குமாரின் வீடு அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளையும் உள்ளூர் நிர்வாகம் இடித்துள்ளது.

காவல்துறை கொடுத்த விளக்கம்
முன்னதாக, காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) அசுதோஷ் குப்தா, “குற்றம் சாட்டப்பட்ட ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா ஆகியோர் 12 வயது சிறுமியின் அந்தரங்கத்தில் குச்சி அல்லது வேறு ஏதேனும் பொருள் செருகப்பட்டதை நான் மறுக்கவில்லை.

ஆனால், இதனை மருத்துவ அறிக்கையில் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். சிறுமி, ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மூத்த அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்” கூறினார்.

தேவைப்படும் நேரத்தில் சிறுமியை மேல் சிகிச்சைக்காக போபால் அல்லது டெல்லிக்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...