கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா
உலகம்செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

Share

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த விடயம் சர்வதேச சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நீர்மூழ்கி கப்பல் நேற்றையதினம்(24.07.2023) தென்கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

கொரியப் போருக்குப் பின்னர், நாற்பதாண்டுகள் கழித்து, முதல் முறையாக, கடந்த வாரம் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது.

யுஎஸ்எஸ் கெண்டக்கி எனும் அமெரிக்காவின் குறித்த கப்பல் 1980ற்கு பின்னர் முதன்முறையாக தென்கொரியாவை சென்றடைந்துள்ளது.

வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில், தென்கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த தருணத்தில் யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பல் மற்றும் தற்போது வருகை தந்துள்ள ஒன்- அபோலிஸ் கப்பல்களின் வருகையானது வடகொரியாவை அமெரிக்கா சீண்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் வருகையை எச்சரிக்கும் முகமாக வடகொரியா இரண்டு பொலிக்ஸ்ட்டிக் வகை ஏவுகணைகளை தென்கொரிய கடற்பரப்பில் செலுத்தி தங்கள் வலுவைக் காட்டியுள்ளது.

அதைத் தொடர்ந்தும் கடந்த சனிக்கிழமை தாழ்வாகப் பறந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் சிறு இறக்கை ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

இரண்டு தரப்பும் தங்களின் படை பலத்தைக் காட்டிவருவதால், கொரியத் தீபகற்பப் பகுதியில் போர்ப் பதற்றம் கூடியுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்கப் படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ், ஒன்- அபோலிஸ் ஆகிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தென்கொரியாவுக்கு வருகைதந்துள்ளன.

மேலும் தற்போது வருகைதந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலானது இதற்கு முன்ன்ர் தென்கொரியாவிற்கு வருகைதந்த யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பலை போல் இல்லை எனவும், அணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்றும், எதிரித் தரப்பு கப்பல்களை அழிக்கக்கூடியது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...