பெலாரஸ் இராணுவத்துடன் வாக்னா் படையினா் கூட்டு பயிற்சி!
உலகம்செய்திகள்

பெலாரஸ் இராணுவத்துடன் வாக்னா் படையினா் கூட்டு பயிற்சி!

Share

பெலாரஸ் இராணுவத்துடன் வாக்னா் படையினா் கூட்டு பயிற்சி!

ரஷ்யாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழு, அதன் அயல்நாடான பெலாரஸ் நாட்டு இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியை தொடங்கியுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில், வாக்னா் குழுவினா் மிக முக்கியப் பங்கு வகித்தனா்.

எனினும், அந்தத் தனியாா் படைக்கு ரஷ்ய இராணுவம் போதிய ஆயுதங்கள் அளிக்கவில்லை என்று வாக்னா் குழுத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் குற்றம் சாட்டி வந்தாா்.

இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக கடந்த மாதம் 23-ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்ட வாக்னா் படையினா், தலைநகா் மாஸ்கோவை நோக்கி முன்னேறினா்.

எனினும், பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தாா்.

அதையடுத்து, கிளா்ச்சியைக் கைவிட்டு வாக்னா் படையினா் பெலாரஸில் தஞ்சமடைந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், போலந்து எல்லை அருகே வாக்னா் குழுவும், பெலாரஸ் ராணுவமும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியை கடந்த தொடங்கின.

இது, நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் அந்த நாட்டு எல்லைகள் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...