ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி
உலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

Share

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு சமீபத்தில் இடம்பெற்றது.

இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்நிலையில், வில்னியஸ் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புடின் , “நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதே வேளையில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவது என்பது உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரித்து மோதலை நீட்டிக்கும்.

250 கிமீ (155 மைல்கள்) பயணிக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் முடிவுச் செய்துள்ளது.

அந்த ஆயுதங்கள் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை போரின் போக்கை மாற்ற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நேட்டோ மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசும்போது, “ புடின் உக்ரைன் போரில் தோற்றுவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம், உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால், எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனிப்போர் காலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூபிக்கிறது என்று விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...