rtjy 78 scaled
உலகம்செய்திகள்

கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

Share

கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைன் மீது தாக்குதலை தொடங்குவதாக அறிவித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான முழுநீளப் போரை ரஷ்யா அறிவித்தது.

இதுவரை நடந்துள்ள போர் தாக்குதலில் ரஷ்யாவின் மீது பல்வேறு உலக நாடுகள் போர் அத்துமீறல் குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போரானது, ஆண்டுகளை கடந்து தற்போது 500 நாட்களை தொட்டுள்ளது.

இந்த 500 நாட்களும் ரஷ்யா உக்ரைன் மீது வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல், அல்லது ட்ரோன் தாக்குதல் போன்ற ஏதாவது ஒரு வகை தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் லட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போர் 500வது நாளை தொட்டு இருப்பதை மேற்கோள் காட்டி, உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த இறப்பு எண்ணிக்கையானது கூடுதலாக இருக்கும் என்று ஐ.நா பிரதிநிதி முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...