ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி
உலகம்செய்திகள்

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி

Share

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது, பாலியல் நோக்கம் கொண்ட ஒருவரால் 160 அடி பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட அழகிய இளம்பெண்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டவையாம்.

Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) ஆகிய இருவரும் அந்த மாளிகையைக் காணச் சென்றுள்ளார்கள்.

அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தான் அந்த இடத்தைக் காண அந்த பெண்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அவரது நோக்கம் மோசமானதாக இருந்திருக்கிறது. அவர் ஈவாவிடம் தவறாக நடக்க முயன்றிருப்பார் போலும், கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், ஈவாவைக் காப்பாற்ற இயலவில்லை, அவர் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த ஈவா, Naperville என்னுமிடத்தில் வளர்ந்தவர் ஆவார். அவருக்கு இன்று காலை 10.00 மணிக்கு Napervilleயில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெல்சி, கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...