ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி
உலகம்செய்திகள்

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி

Share

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகி

ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது, பாலியல் நோக்கம் கொண்ட ஒருவரால் 160 அடி பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட அழகிய இளம்பெண்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டவையாம்.

Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) ஆகிய இருவரும் அந்த மாளிகையைக் காணச் சென்றுள்ளார்கள்.

அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தான் அந்த இடத்தைக் காண அந்த பெண்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அவரது நோக்கம் மோசமானதாக இருந்திருக்கிறது. அவர் ஈவாவிடம் தவறாக நடக்க முயன்றிருப்பார் போலும், கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், ஈவாவைக் காப்பாற்ற இயலவில்லை, அவர் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த ஈவா, Naperville என்னுமிடத்தில் வளர்ந்தவர் ஆவார். அவருக்கு இன்று காலை 10.00 மணிக்கு Napervilleயில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெல்சி, கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...