இளம் பெண் படுகொலை
உலகம்செய்திகள்

லண்டனில் இந்திய இளம் பெண் படுகொலை!

Share

இளம் பெண் படுகொலை – லண்டன்.

லண்டனில் கொலைச் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம் பெண்ணின் வழக்கிற்கான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் வழங்கப்படும் என லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், குறித்த பெண்ணை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்தே லண்டன் பழைய பெய்லி நீதிமன்றம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி இளம் பெண்ணான 19 வயதுடைய சபீதா, லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்டு, அருகிலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து பார்க்கும் போது, சபீதாவின் அறையிலிருந்து இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு
தகவலறிந்து பொலிஸார் அங்கு வந்தபோது சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளனர். மருத்துவ உதவிக்குழுவினர் காப்பாற்ற முயன்றும் பலனின்றி சம்பவதினத்தன்று காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் கொலையாளியை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தோட்டம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 23 வயதுடைய மஹர் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொலிஸார் அவரை கைது செய்ய முயலும் போது, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அந்நபர் சபீதாவை கொலை செய்ததை பழைய பெய்லி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள் என்பது விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...