பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு
உலகம்செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

Share

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு!

ஒரு வருடத்தில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022 -23) ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, 86.3 மில்லியன் பவுண்டுகள்.

2021 – 22 காலகட்டத்திற்கும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு செலவோ 107.5 மில்லியன் பவுண்டுகள்! இந்த தொகை கடந்த ஆண்டைவிட செலவு 5 சதவிகிதம், அதாவது, 21 மில்லியன் பவுண்டுகள் அதிகம் ஆகும்.

பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பித்தல், மறைந்த மகாராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கான செலவு, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கான செலவு என இந்த ஆண்டு அதிக செலவானதுடன், பணவீக்கமும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிக்கப்படுவதற்காக இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 34.5 மில்லியன் பவுண்டுகள். பக்கிங்காம் அரண்மனையின் புதுப்பித்தலுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையோ 369 மில்லியன் பவுண்டுகள். ஆனால், தற்போது அங்கு யாரும் வாழ்வில்லை.

புதுப்பித்தல் பணி முடிந்தபின் மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் பக்கிங்காம் அரண்மனையில் வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...