rtjy 11 scaled
உலகம்செய்திகள்

30000 பேரை உயிரோடு கடலில் வீசிய கொலைகார விமானம் ஆர்ஜென்டினாவில்

Share

ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றிருந்தது.

ஆர்ஜென்டினாவில் இராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, விமானத்தின் மூலம் உயிருடன் கடலில் வீசி கொல்லப்பட்ட கொடூரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கொலைகார விமானம் என அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1726034823 FDIs 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு 138% உயர்வு: 2025 செப்டம்பர் வரை $827 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான...

9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...