உலகம்
பாதசாரிகள் மீது காரை மோதி கொன்ற நபர்!
பாதசாரிகள் மீது காரை மோதி கொன்ற நபர்!
அமெரிக்க நாட்டில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லி நகரில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சாலையில் ஓடியுள்ளது.
பின்னர் சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதிய நிலையில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
மேலும், இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்ததாக நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login