images 2 1
உலகம்செய்திகள்

பஞ்சுக்குள் சிக்கிய மர்மம்!

Share

பஞ்சுக்குள் சிக்கிய மர்மம்!

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு தடைசெய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது ச்சுங்கவரித்துறையினரால் இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.

இச்சம்பவம் தெற்கு பிரான்சின் Millau (Aveyron) நகரில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை மாலை A75 நெடுஞ்சாலையில் சுங்கவரித்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பார ஊர்தி ஒன்று பயணிப்பதை பார்த்து, அதனை தடுத்து நிறுத்தினர்.

சாரதியிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது, முகக்கவச்சம் தயாரிப்பதற்குரிய பஞ்சுகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

அவரது பதிலில் திருத்தியடையாத சுங்கவரித்துறையினர், பார ஊர்தியின் பெட்டியை திறந்த சோதனை செய்தனர். அதன்போது, பஞ்சுப்பெட்டிகளுக்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.

பிரான்சில் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ள சிகரெட்டுகளே இவ்வாறு மறைத்து எடுத்துச்செல்லப்பட்டிருந்தன. மொத்தமாக 8,903 பொதிகளில் 1,780 கிலோ எடையுள்ள சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டன.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...