w720 p16x9 2022 01 25T203739Z 982850873 RC2K6S9UCWTU RTRMADP 3 USA IMMIGRATION FLORIDA
உலகம்செய்திகள்

அகதிகளை ஏற்றிய படகு விபத்து!!- 38 பேரை காணவில்லை!!

Share

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து கிடைப்பதனை கண்டுள்ளனர்.

உடனடியாக படகின் அருகில் சென்று பார்த்தபோது படகின் மேல் பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்குப் போராடுவதைப் பார்த்து கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் சனிக்கிழமை இரவு சுமார் 40 பேருடன் அகதிகளை ஏற்றி வந்த படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படகு கவிழ்ந்த பகுதியில் ஒருவரின் சடலத்தை மீட்டு இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

காணாமல் போன 38 தேடி வருவதாகவும் படகிலிருந்து விழுந்தவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடி உயிர் பிழைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#World



Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...