16 2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டில் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

Share

பிரித்தானியாவில் 2025ஆம் ஆண்டில் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டில், சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் சுமார் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம், உற்பத்தி விலை எக்கச்சக்கமாக அதிகரிப்பு, தொழில்களுக்கு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உருவாக இருப்பதாக புதிய ஆண்டில் மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, சில்லறை வர்த்தகர்களுக்கு 2025 மோசமான நிதி ஆண்டாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் பதவியேற்றுள்ள லேபர் அரசின் கொள்கைகள், தொழில்கள் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய சேன்சலரான Rachel Reeves அறிமுகம் செய்துள்ள தொழில்கள் தொடர்பான கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டில் 202,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிகின்றன அந்த ஆய்வுகள்.

குறைந்த ஊதியம், குறைவான பணியாளர்கள், உயர் நுகர்வோர் விலைகள் என பணியாளர்கள் மீது லேபர் அரசின் பட்ஜெட் கடும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

பல பிரபல சில்லறை தொழில்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில், கோவிட் ஏற்படுத்திய பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக 345,000 தொழில்கள் தங்கள் கதவுகளை மூடும் நிலை ஏற்பட்டது.

தற்போது அதே போன்றதொரு நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக நம்புகிறார்கள் நிபுணர்கள்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...