7 1 scaled
உலகம்செய்திகள்

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

Share

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறால் வருந்துகிறார்.

வடக்கு லண்டனில் உள்ள உயர் பார்னெட் சுரங்க ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்து, சாரா டி லகார்டே(Sarah de Lagarde) என்ற பிரித்தானிய தாய் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறினால் கை மற்றும் காலை இழந்து வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

செப்டம்பர் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தின் நடைப்பாதைக்கும், நிலையான ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே தவறி விழுந்தார்.

இதனால் அவருக்கு மூக்கு மற்றும் இரண்டு பற்கள் உடைந்தது, துரதிஷ்டவசமாக அவர் தவறி விழுந்ததை யாரும் கவனிக்க தவறிவிட்டனர்.

நடைப்பாதைக்கும், ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே சிக்கி கொண்டு இருக்கும் போதே ரயில் புறப்பட்டதால், சாரா டி லகார்டே தன்னுடைய கைகளை இழந்தார்.

பயங்கர கூச்சலிட்ட பிறகும் யாரும் சாரா டி லகார்டே-வை கவனிக்க தவறியதால் இரண்டாவதாக வந்த ரயில் அவரது காலை துண்டாக்கியது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகே நபர் ஒருவர் அலாரத்தை ஒலிக்க செய்து, அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த மொத்த சம்பவம் நிகழும் போது சுயநினைவுடன் இருந்த சாரா டி லகார்டே வீட்டிற்கு திரும்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்ததாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனக்கண்களில், அவருடைய இரண்டு மகள்கள் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை அம்மா நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...