7 1 scaled
உலகம்செய்திகள்

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

Share

லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறால் வருந்துகிறார்.

வடக்கு லண்டனில் உள்ள உயர் பார்னெட் சுரங்க ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்து, சாரா டி லகார்டே(Sarah de Lagarde) என்ற பிரித்தானிய தாய் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறினால் கை மற்றும் காலை இழந்து வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

செப்டம்பர் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தின் நடைப்பாதைக்கும், நிலையான ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே தவறி விழுந்தார்.

இதனால் அவருக்கு மூக்கு மற்றும் இரண்டு பற்கள் உடைந்தது, துரதிஷ்டவசமாக அவர் தவறி விழுந்ததை யாரும் கவனிக்க தவறிவிட்டனர்.

நடைப்பாதைக்கும், ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே சிக்கி கொண்டு இருக்கும் போதே ரயில் புறப்பட்டதால், சாரா டி லகார்டே தன்னுடைய கைகளை இழந்தார்.

பயங்கர கூச்சலிட்ட பிறகும் யாரும் சாரா டி லகார்டே-வை கவனிக்க தவறியதால் இரண்டாவதாக வந்த ரயில் அவரது காலை துண்டாக்கியது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகே நபர் ஒருவர் அலாரத்தை ஒலிக்க செய்து, அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த மொத்த சம்பவம் நிகழும் போது சுயநினைவுடன் இருந்த சாரா டி லகார்டே வீட்டிற்கு திரும்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்ததாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனக்கண்களில், அவருடைய இரண்டு மகள்கள் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை அம்மா நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...