tamilni 377 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி

Share

சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் 2,500 பேர் திரண்டு பேரணியில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சனிக்கிழமையன்று, காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரியும், ஆக்கிரமிப்பைக் கைவிடக்கோரியும் சுமார் 2,500 பேர் ஜெனீவாவில் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.

Les Grottes என்னுமிடத்தில் துவங்கிய பேரணி, Place Neuve என்னுமிடத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஈடுபட்டோர் Mont-Blanc பாலம் வழியாகச் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பேரணியில் கலந்துகொண்ட ஒருவர், சர்வதேச மனிதநேய சட்டத்தை கடைப்பிடிப்பதும், அதற்கு இடையூறு ஏற்படும்போது அநீதிக்கெதிராக குரல் கொடுப்பதும் சுவிட்சர்லாந்தின் கடமை என்று கூறினார்.

மாகாணத்தில் நடைபெற்ற பேரணி பொலிசாரின் கடுமையான கண்காணிப்பின் கீழ நடந்ததால், பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...