z p01 Special
உலகம்செய்திகள்

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

Share

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, கடலுக்கடியில் ரிக்டர் அளவில் 9 முதல் 9.3 ஆக பதிவான நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கியது, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களில் பலரது உயிரும் பறிபோனது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சரி வர தெரியாததால், உண்மையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி | 19Th Annual Tsunami Commemoration

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்  அனுஷ்டிக்கப்படவுள்ளது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் முடிந்தாலும் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடித்துக்கொண்டே இருகிறது எனலாம்.

ஆகவே சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நினைவு நாள் கடைப்பிடிக்கவுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படவிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...