2 3 scaled
உலகம்செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

Share

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 14 வயது சிறுமிகள்
கடந்த புதன்கிழமையன்று, பிராங்க்பர்ட்டுக்கு வடக்கே உள்ள Bad Emstal என்னுமிடத்தில், 14 வயது சிறுமி ஒருத்தி காணாமல்போனாள்.

அவளை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமையன்று அவளது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தச் சிறுமிக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமையன்று, 14 வயது சிறுமி ஒருத்தியைக் கொலை செய்த 30 வயது நபர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், தெற்கு ஜேர்மனியிலுள்ள Gottenheim என்னுமிடத்தில், Ayleen என்னும் 14வயது சிறுமி காணாமல்போனாள்.

அவளும், Jan Heiko P (30) என்னும் நபரும் சமூக ஊடகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்டது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்தனர். Ayleen தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளை Heiko கொடூரமாக கொலை செய்ததாக கூறிய நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Heiko மீது, கொலை, வன்புணர்வு முயற்சி முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த Heiko, தனக்கு 14 வயது இருக்கும்போதே, 11 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர முயன்றது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...

09 5
செய்திகள்விளையாட்டு

ஈரான் பதற்றம் எதிரொலி: டி20 உலகக் கோப்பைக்காக ஐசிசி அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தியது!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி உறுப்பு...

08 4
செய்திகள்உலகம்

பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரானிலிருந்து பஹ்ரைன் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,...

07 3
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கான சொத்துக் கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக் கடன் எல்லையை...