உலகம்செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

2 3 scaled
Share

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 14 வயது சிறுமிகள்
கடந்த புதன்கிழமையன்று, பிராங்க்பர்ட்டுக்கு வடக்கே உள்ள Bad Emstal என்னுமிடத்தில், 14 வயது சிறுமி ஒருத்தி காணாமல்போனாள்.

அவளை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமையன்று அவளது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தச் சிறுமிக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமையன்று, 14 வயது சிறுமி ஒருத்தியைக் கொலை செய்த 30 வயது நபர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், தெற்கு ஜேர்மனியிலுள்ள Gottenheim என்னுமிடத்தில், Ayleen என்னும் 14வயது சிறுமி காணாமல்போனாள்.

அவளும், Jan Heiko P (30) என்னும் நபரும் சமூக ஊடகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்டது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்தனர். Ayleen தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளை Heiko கொடூரமாக கொலை செய்ததாக கூறிய நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Heiko மீது, கொலை, வன்புணர்வு முயற்சி முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த Heiko, தனக்கு 14 வயது இருக்கும்போதே, 11 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர முயன்றது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...