7 9
உலகம்செய்திகள்

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

Share

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், “எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் இரட்டையர் மாணவர்களை இங்கு வந்து சேருங்கள் என்று கேட்கவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமான தகவல் தான்.

அதேபோல் அவர்களுக்கு நாங்கள் சலுகைகளை வழங்கவில்லை. அணைத்து மாணவர்களுக்கும் பொதுவான கட்டணம் தான்” என்றார்.

இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் படிக்கும் பல இரட்டையர்களில் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பைப் பெற்றோர் தருவதாகப் புகார் அளிப்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களை தனி தனி வகுப்புகளில் படிக்க வைத்துள்ளோம்” என்றார்.

மேலும், இந்த மாணவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல, மாணவர்களிடத்திலும் இந்த குழப்பம் இருப்பதாக கூறுகின்றனர்.

யார் என்று அடையாளம் காண முடியாமல் பெயர்களை மாற்றி மாற்றி ஆசிரியர்கள் அழைக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஒரு சிறப்புத் திட்டத்தை பள்ளி அமல்படுத்தி இருக்கிறது.

அதாவது, இரட்டையர்களை ஒரே வகுப்பறையில் படிக்க அனுமதிக்காமல் தனித் தனிப் பிரிவில் போட்டுவிடுகிறார்கள். இதனால், ஓரளவிற்கு குழப்பத்தை கட்டுப்படுத்த முடிகிறது என்கிறார்கள்.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...