7 9
உலகம்செய்திகள்

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

Share

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் கூறுகையில், “எங்களுடைய பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் இரட்டையர் மாணவர்களை இங்கு வந்து சேருங்கள் என்று கேட்கவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமான தகவல் தான்.

அதேபோல் அவர்களுக்கு நாங்கள் சலுகைகளை வழங்கவில்லை. அணைத்து மாணவர்களுக்கும் பொதுவான கட்டணம் தான்” என்றார்.

இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் படிக்கும் பல இரட்டையர்களில் ஒரு பிள்ளைக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பைப் பெற்றோர் தருவதாகப் புகார் அளிப்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களை தனி தனி வகுப்புகளில் படிக்க வைத்துள்ளோம்” என்றார்.

மேலும், இந்த மாணவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல, மாணவர்களிடத்திலும் இந்த குழப்பம் இருப்பதாக கூறுகின்றனர்.

யார் என்று அடையாளம் காண முடியாமல் பெயர்களை மாற்றி மாற்றி ஆசிரியர்கள் அழைக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஒரு சிறப்புத் திட்டத்தை பள்ளி அமல்படுத்தி இருக்கிறது.

அதாவது, இரட்டையர்களை ஒரே வகுப்பறையில் படிக்க அனுமதிக்காமல் தனித் தனிப் பிரிவில் போட்டுவிடுகிறார்கள். இதனால், ஓரளவிற்கு குழப்பத்தை கட்டுப்படுத்த முடிகிறது என்கிறார்கள்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...