4 6 1 scaled
உலகம்செய்திகள்

காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்

Share

காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்

தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள்.

கனடாவின் Ottawa நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழும் தனது முன்னாள் காதலியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற டேவிட் (David White, 58) என்பவரை வீட்டுக்குள் அனுமதிக்க அந்த பெண் மறுத்துள்ளார்.

ஆத்திரத்தில், வேறொரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் டேவிட். அந்த வீட்டுக்குள் சுமையா என்னும் 12 வயது சிறுமி இருந்திருக்கிறாள்.

கதவை உட்புறமாகப் பூட்டிய டேவிட், சுமையாவைப் பார்த்து, உன் தாய் உட்பட கட்டிடத்தில் இருந்த எல்லாரும் செத்துவிட்டார்கள் என்று கத்தியிருக்கிறார்.

பயந்துபோன சுமையா குளியலறைக்குள் சென்று ஒளிய முயல, குளியலறைக் கதவில் தாழ்ப்பாள் இல்லாததால், என்ன செய்வதென்று புரியாமல், ஓடிச் சென்று மாடியிலிருந்து குதித்திருக்கிறாள்.

டேவிடுக்கு ஒன்பது மாதங்கள் வீட்டுச் சிறை தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஆண்டுகள் அவர் அதிகாரிகளின் மேற்பார்வையிலிருக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், துஷ்பிரயோகத்துக்குள்ளாகி போதைக்கு அடிமையாகியிருக்கிறார் டேவிட், அத்துடன், சமீபத்தில்தான் அவரது மகன் போதை காரணமாக உயிரிழந்துள்ளான்.

ஆனால், டேவிடுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என கருதுகிறார்கள் சுமையாவின் குடும்பத்தினர். மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சுமையாவின் கால், கணுக்கால் மற்றும் முதுகெலும்பிலுள்ள எலும்புகள் நொறுங்கிப்போனதால் அவள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

ஆகவே, தன் மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார் சுமையாவின் தாயாகிய Zeinab Mohamed. டேவிடுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை, நிறம் சார்ந்த தங்களுக்கு சட்ட அமைப்பு பாரபட்சம் காட்டுவது போல் உள்ளதாக தான் கருதுவதாக தெரிவிக்கும் அவர், கனடா தங்கள் நாடு அல்ல என்பது போல் உணர்வதாகத் தெரிவிக்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...