2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

Share

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 100 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய அரசாங்கத்தால் மீட்கப்பட்ட இந்த மாணவர்கள், நேற்று முன்தினம் (டிசம்பர் 8) இராணுவ வாகனங்கள் மற்றும் கவச வாகனங்களில் அரசு மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பிள்ளைகள் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் உதைப்பந்தாட்ட ஜேர்சிகள், அங்கிகள் மற்றும் செருப்புகளை அணிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, இப்பாடசாலைக்குள் புகுந்த துப்பாக்கி தாரிகள், 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...