உலகம்செய்திகள்

ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை

Share

ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை

முதன்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதிற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதத்தை கொண்டு ஜப்பான் உலகின் மிக வயதான மக்கள் தொகை கொண்ட நாடு என தெரிவித்துள்ளது.

சுமார் 125 மில்லியன் மக்கள் தொகையில் 29.1% பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பதாக ஜப்பானின் தேசிய தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் படி, 2040ம் ஆண்டுக்குள் ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 34.8% ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ஜனவரி மாதம் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்களால் சமூகமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜப்பானை தொடர்ந்து இத்தாலி முதியவர்கள் மக்கள் தொகை 24.5%, பின்லாந்து 23.6% ஆக உள்ளது, இதுவே உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வயது முதியவரின் நாடுகளின் வரிசையில் உள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....