tamilni 364 scaled
உலகம்செய்திகள்

உயரத்தை அதிகரிக்க ரூ.1.46 கோடி செலவு செய்து சர்ஜெரி.., 5 அடி இளைஞருக்கு நேர்ந்த தீராத வலி

Share

உயரத்தை அதிகரிக்க ரூ.1.46 கோடி செலவு செய்து சர்ஜெரி.., 5 அடி இளைஞருக்கு நேர்ந்த தீராத வலி

உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் ஒருவர் தற்போது பல பிரச்சனைகளையும், வலியையும் சந்தித்து வருகிறார்.

தற்போதைய காலத்தில் பலரும் நம்மை அழகாக காட்டுவதற்காக அறுவை சிகிச்சைகள் செய்து வருகின்றனர். குறிப்பாக கண்கள், மூக்கு, இடுப்பு ஆகியவற்றை அழகாக காண்பிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

இப்படி செய்யும் அறுவை சிகிச்சை எல்லாம் வெற்றியடைவதில்லை. சில பேருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில பேர் இதனால் உயிரிழக்கின்றனர். அதனை நான் சமீபத்தில் வெளிவந்த செய்திகளில் பார்த்திருப்போம். அப்படி தான் இளைஞர் ஒருவர் உயரத்தை அதிகரிக்க வேண்டுமென பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

கொலம்பியாவில் உள்ள 29 வயது இளைஞர் ஜெபர்சன் கோசியோ. இவரது உயரம் முதலில் 5 அடி 8 அங்குலம்தான் இருந்துள்ளது. இவர் தனது உயரத்தை அதிகரிக்க 4 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து 6 அடியாக மாற்றியதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்காக ஜெபர்சன் சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், அதன்பிறகு தான் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி தீரவில்லை. இரவு மாத்திரை போட்டு தூங்கினாலும் தூக்கம் வரவில்லை .

இதனால் அவர் வலியை போக்குவதற்காக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவுள்ளார். அதுமட்டுமல்லாமல், தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வரும் 25 -ம் திகதி நடைபெற இருப்பதாக ஜெபர்சன் கூறியுள்ளார்.

இது குறித்து சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், “அழகுக்காக நீங்கள் செய்யும் விடயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அழகுக்கு பின்னால் ஓடாதீர்கள்” என்று கூறியுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....