24 66f8ce3f915ac 5
உலகம்

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Share

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் இன்று (01.10.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது பாடசாலை சுற்றுலாவிற்காக மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் வரை பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பேருந்தில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

9 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரேலில் இருந்து...

8 3
உலகம்செய்திகள்

அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மூர்க்கத்தனமானவை என்றும் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்...

7 6
உலகம்செய்திகள்

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணு ஆயுத தளங்களை அழித்த பிறகு, ஈரான் மீண்டும்...