3 17 scaled
உலகம்

வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

Share

வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த கடந்த 30 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாத வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வயநாட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை கேரளா மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறைகள் உருண்டு விழுந்தத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...